காதல் வந்திடுச்சா?-கவிதை
Labels:
காதல் கவிதைகள்
காதல் வந்திடுச்சா ?
விழி மோதிச்சிதறும்போது
மொழி சிக்கித்திணறும்
அக்கினியில் வீழ்ந்தாலும்
அண்டார்டிக்கா குளிர் தோன்றும்
இலையுதிர்காலத்திலும்
இடைவிடாது தூறல் வீசும்
அந்தரத்தில் பறந்துகொண்டு
அதிசயங்கள் செய்யவைக்கும்
நரி ஊளையுடும்போதும்
நடனம் ஆடத்தோன்றும்
சூரியச்சூட்டிலும்
சுகமான இன்பம் தோன்றும்
வான் இடிந்து வீழ்ந்தால்கூட
வாய்பிளந்து பார்க்கத்தோன்றும்
என்னவோ நடக்கும்
எதுவுமே தொடர்பில்லை
தன்னிலை மறக்கும்
தனிமையில் சிரிக்கும்
காதலித்துப்பார்
கவலையெல்லாம் பறந்துபோகும்
Post a Comment