காதல் என்பது வெங்காயம்..
Labels:
காதல் கவிதைகள்,
படித்ததில் பிடித்தது
காதல் என்பது வெங்காயம்....
கண்டவுடன் காதல்.
அழகான வானவில்.
மழைநின்றதும் மறைந்துவிடும்.
----------------
காதல் ஒரு வெங்காயம்.
உரித்தால் ஒன்றுமில்லை.
வெட்டினால் கண்ணீர் வரும்.
---------
காதலுக்காக உயிர் கொடுப்பேனென்றாய்.
வேண்டாம்.
எனது உயிரை எடுக்காமல் இருந்தால் போதும்.
----------
காதலிப்பது
அறிவோடு யோசிப்பது.
இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது.
---------
உண்மையான காதல் என்பது பேய் பிசாசை போல
எல்லோரும் அதைப்பற்றி பேசுகிறோம்.
யாராவது ஓரிருவர்தான் அதைப் பார்த்திருக்கிறார்கள்.
---------
காதலில்லாத வாழ்க்கை வெறுமையானது.
ஆனால் காதலை விட அந்த வெறுமை மிக மேலானது.
----------
காதலென்பது ஒரு புதைகுழி.
எத்துணை ஆழம் நாம் அதில் இறங்குகிறோமோ
அத்துணை கடினம் அதிலிருந்து வெளியேறுவது.
----------
உலகத்தின் காதல்கள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன.
பெரும்பாலானவை கல்யாணத்தில் முடிவதில்லை.
மற்றவை கல்யாணத்தோடு முடிந்து போகின்றன.
------------
காதலுக்கு கண்ணில்லை.
கண்மூடி கிடக்கும் வரை அது நீடிக்கிறது.
கண்திறந்தால் காணாமல் போகிறது.
------------
காதல் ஒரு கவசம்.
மனிதம் அதற்குள்தான் தன் காமத்தை மறைத்து வைத்திருக்கிறது.
காதலில்லாத காமம் சாத்தியம்.
காமமில்லாத காதல் ????
-------------
காதல் கணத்தில் தோன்றுகிறது.
நாட்கள் செல்ல வெளிப்படுகிறது.
மாதங்கள் வருடங்களில் வளர்கிறது.
மறக்கப்படுவதற்கு ஒரு வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறது.
----------
பிப்ரவரி 14
இன்னுமோர் முட்டாள்கள் தினம்.
---------
காதல் என்பது கடவுள்.
நான் நாத்திகவாதி.
இரண்டையுமே நம்புவதில்லை.
March 30, 2010 at 9:39 PM
nalla iruku bt konjam pilaikalum iruku.......marks 85%
Post a Comment